போலீசாரை அரிவாளால் வெட்டிய போக்சோ கைதி - ராமநாதபுரத்தில் உச்ச கட்ட பரபரப்பு

x

ராமநாதபுரம் அருகே, போலீசாரை அரிவாளால் வெட்டிய போக்சோ வழக்கு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆனந்த நகர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜா என்கிற அசோக்குமார். கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்த ஜேசுராஜ், நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக, போலீசார் அவரை கைது செய்வதற்காக வீட்டிற்கு சென்றபோது, குற்றவாளி மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை சரமாரியாக தாக்கினால். இதில் காளிமுத்து என்பவருக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த காளிமுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜேசுராஜாவை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் உள்ள கழிவறையில் ஜேசுராஜ் தவறுதலாக வழுக்கி விழுந்ததில், அவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்