பிரதமருக்கு எதிர்ப்பு...பாம்பன் பாலத்தில் கருப்பு பலூன்...கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர்

x

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாம்பன் பாலத்தில் கருப்பு பலூன் பறக்க விட முயன்ற காங்கிரசை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், பாம்பன் சாலை பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு பலூன்களை கையில் வைத்து பறக்கவிட முயன்றபோது, 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர், பாம்பன் பாலம் பகுதிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்