அடகு வைத்தது 68 கிராம்.. மீட்கப்பட்டது 70 கிராம்... தங்கத்திற்கு பதில் கவரிங் நகை கொடுத்த வங்கி

x

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் ஒரத்தநாட்டில் உள்ள யூனியன் வங்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நெக்லஸ், இரண்டு மோதிரம், என மொத்தம் 68 கிராம் எடையுள்ள நகைகளை 1 லட்சத்து 63 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். இதனையடுத்து வட்டியுடன் சேர்த்து நகைகளை மீட்டு எடை பார்த்த போது, 70 கிராம் இருந்துள்ளது. இதனால் பாலு அதிர்ச்சி அடைந்து நகைகளை சரி பார்க்கும் போது அதில் 20 கிராம் எடையுள்ள செயின் கவரிங் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் வங்கி ஊழியர்களிடம் கேட்ட போது இது தான் உங்கள் நகை எடுத்து செல்லுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஒரத்தாநாடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்