பெட்ரோல் பங்க் ஓனர் தாக்கப்பட்ட வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் தாக்கப்பட்ட வழக்கில், தீவிர குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதால், கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்த்து விசாரிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கருங்குழி காடு பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் தாக்கல் செய்த மனுவில், களக்குடி தோப்பு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருவதாகவும், தனக்கும், நாகுடியை சேர்ந்த ராவுத்தருக்கும் இடப்பிரச்னை உள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த மாதம் 27ம் தேதி பெட்ரோல் பங்கிற்கு வந்த ராவுத்தர் மற்றும் சிலர், தன்னை இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாகவும், இதுகுறித்து புகார் அளித்தபோது போலீசார் தன்னிடம் வெற்றுக்காகிதம் உட்பட சில தாள்களில் கையெழுத்து பெற்றதாகவும் குறிப்பிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், மனுதாரர் தரப்பில் தீவிரமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதால், நாகுடி போலீசார், கூடுதல் சட்ட பிரிவுகளை சேர்த்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்