என்.எல்.சி தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி - சீமான் திடீர் ட்வீட்

x

நெய்வேலி என்.எல்.சி.,யில் பல ஆண்டுகளாக பணிபுரியும் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் என்.எல்.சி நிறுவனம் ஏமாற்றி வருவது கண்டனத்துக்குரியது என, குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாமல் இருப்பது உழைக்கும் தொழிலாளர்களின் குருதியைக் குடிக்கும் கொடுஞ்செயல் என, சீமான் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்