"நடவடிக்கை எடுக்காதது ஏன்?" -பெரியார் பல்கலை.,யில் பணியாளர்கள் போராட்டம்

x

சேலம் ப ெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடைபெறும் நிர்வாக முறைகேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழக சேலம் மேற்கு ஒருங்கிணைந்த பணியாளர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார் உறுதியானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும், சான்றிதழ் முறைகேடு, வகுப்பு நேரத்தில் அநாகரீகமாக நடக்கும் ஆசிரியர்கள் மற்றும் தவறான பதவி உயர்வுக்கு துணைபோவது ஏன்? என்றும், ஆராய்ச்சி மாணவர்களிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகை முன்வைத்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்