தினமும் 1 லி எண்ணெய் வாங்கும் மக்கள்- அட்டகாசம் செய்யும் திருட்டுக் கரடி

x

நீலகிரி பந்தலூர் நகரத்தின் இரும்பு பாலம், இன்கோ நகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக கரடி ஒன்று தினந்தோறும் வீடுகளில் சமையலறை பகுதியில் உள்ள ஜன்னல்களை உடைத்துக் கொண்டு உள்ளே இருக்கும் சமையல் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை தூக்கிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது... தொல்லை தாங்க முடியாத பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர்... இந்நிலையில், தற்போது அதே பகுதியில் 3 இடங்களில் வனத்துறை சார்பாக கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன... குறிப்பாக கூண்டுகளுக்குள் வனத்துறையினர் சமையல் எண்ணையை வைத்து கரடியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்