"மக்கள் தவிர்க்க வேண்டும்" - ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

x

காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் தானாகவே மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனிவாசபுரம் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் தானாகவே மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தினார். அதேபோல் சவர்மா போன்ற தெருவோர பாதுகாப்பில்லாத உணவுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்