குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்..படகுகள் மூலம் மீட்கப்படும் மக்கள் - திருவள்ளூரில் பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.. பாலவாயல் குமரன் நகர் பகுதியில் பல வீடுகளை சுற்றி இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவான நிலையில், வீடுகளில் முடங்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகளில் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்..மீட்கப்பட்ட மக்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்