"மின் கட்டணத்திற்கு அபராத தொகை.." - கொந்தளித்த மக்கள்

x

சென்னை, திருவொற்றியூர் காலடிப்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில், அபராத தொகை வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மிக்ஜாம் புயல் எதிரொலியால் மின் கட்டணம் செலுத்தும் உச்சவரம்பு தேதி வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலடிப்பேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கட்டணம் செலுத்த சென்றவர்களிடம் அபராத தொகை கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 4 முதல் 7-ஆம் தேதிவரை மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் கொண்டவர்களுக்கு மட்டுமே 18-ஆம் தேதிவரை உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு முந்தைய தேதிகளில் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராத தொகை செலுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்