ரயில் நிலையத்தில் ஓடி ஓடி மூச்சிரைத்த பயணிகள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

x

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் முறையாக வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மைசூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நடைமேடை ஒன்றில் வந்துநிற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பயணிகள் அங்கு காத்திருந்தனர். ஆனால் ரயில் 2வது நடைமேடைக்கு வந்ததால் பயணிகள் உடைமைகளை தூக்கிக் கொண்டு 2வது நடைமேடைக்கு ஓடினர். சிறிது நேரத்திலேயே ரயில் எடுக்கப்பட்டு 1ம் நடைமேடைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து பயணிகள் மீண்டும் 1ம் நடைமேடைக்கு மாறினர். இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்