மகனை கொன்ற பெற்றோர் - துணையாக நின்ற தாய்மாமன் - தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

x

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே, பெற்ற மகனை கொலை செய்த வழக்கில், தாய், தந்தை மற்றும் தாய்மாமன் கைது செய்யப்பட்டார். செங்கோட்டை அருகே வல்லம் பிஸ்மி 4வது தெருவை சேர்ந்த முகம்மது சித்திக், கடந்த 5ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். சித்திக்கின் கழுத்தில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், பெற்றோரே மகனை கொன்றது அம்பலமானது. போதையில் மகன் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் வெறுப்படைந்த தந்தை, தாய் மற்றும் உறவினர் கொன்றது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்