"இந்த வீடியோவ எங்கிருந்து பாத்தாலும் தயவுசெஞ்சி வீட்டுக்கு வாடா மகனே" - கதறி அழும் தாய், தந்தை

x

செல்போனில் மூழ்கிக் கிடந்ததைக் கண்டித்ததால், அதிருதியில் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவனால், பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நாகூர் மீரான் - ஆஜியா தம்பதியின் மகன், மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வு நேரத்தில் மாணவன் செல்போன் மூழ்கிக் கிடந்ததால், பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், மாயமான மகன் வீடு திரும்பி வரக்கோரி, கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்