பரந்தூர் ஏர்போர்ட்...திடீர் திருப்பம் - அரசு கொடுத்த விளக்கம்

x

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற மத்திய அரசிடம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இவ்விண்ணப்பத்தை திரும்பப் பெறும் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு மார்ச் 13ஆம் தேதி ஏற்றுக் கொண்டுள்ளது... முக்கியமான ஆவணங்கள் சேர்க்க வேண்டியிருப்பதால் திரும்பப் பெறப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் தேர்தல் வரவுள்ளதைக் கருதியும் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்