பிரதான சாலையில் ஓடும் பஸ்ஸில் இருந்து விழுந்த நபர்.. பேரதிர்ச்சி காட்சி

x

பரமக்குடியில், ஓடும் பேருந்தில் இருந்து மாற்றுத்திறனாளி ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று மதுரைக்கு சென்றுள்ளது. இதில், பரமக்குடி அருகே இலந்தைகுளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜேந்திரன் ஏறியுள்ளார். அவர் பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் நின்றபடி சென்றபோது, தவறி விழுந்தார். அவருக்கு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கீழே விழும், சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்