நள்ளிரவில் திருநங்கை வீட்டிற்குள் பயங்கரம் - ஊரையே எழுப்பிய அலறல்.. - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

x

நள்ளிரவில் வீட்டில் நுழைந்து அத்துமீற முயன்ற இளைஞரை கட்டையால தாக்கிக் கொலை செய்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அண்ணாநகரை சேர்ந்த சதீஷ்குமார் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் சதீஷ்குமார் மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தைப்பேட்டையில் வசித்து வரும் திருநங்கை

நவியா என்பவரது வீட்டிற்கு இரவில் சென்ற சதீஷ்குமார், அவரிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த நவியா, கட்டையால் தாக்கியதில் சதீஷ் படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை

மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால், வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தன​ர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திருநங்கை நவியாவை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்