ஆள் உயரத்திற்கு பீச்சியடித்த தண்ணீர்...பள்ளிக்கரணையில் பரபரப்பு

x

சென்னை பள்ளிக்கரணையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் மேல்நிலை நீர்த் தேக்க குடிநீர் தொட்டியின் பணிகள் நிறைவடைந்து குடிநீர் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது, இரு குழாய்களுக்கு இடையேயான இணைப்பு பழுதடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அருகிலேயே இருந்ததால் மேல்நிலை தொட்டியில் தண்ணீர் வெளியேறும் திறப்பானை அடைத்து, இணைப்பை சரி செய்தனர். இதனார், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்