சென்னையை பதறவைத்த பெட்ரோல் பாம் வீச்சு..! விசாரணையில் எதிர்பாராத ட்விஸ்ட்... பின்னணியில் பள்ளிக்கரணை ஆணவ கொலை...

x

பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நித்யானந்தன். தனியார் நிறுவன ஊழியரான இவரது வீடு முன்பு மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் வீட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மர அலமாரி மற்றும் பொருட்கள் எரிந்தன. மேலும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், பள்ளிக்கரணை ஆணவக் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஸ்ரீராம் என்பவரது வீட்டில் எரிவதற்கு பதிலாக, அவரது பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்