பல்லடம் பஸ் ஸ்டாண்டில் திருநங்கைக்கு நேர்ந்த பயங்கரம்

x

பல்லடம் அபிராமி நகரைச் சேர்ந்த திருநங்கை அம்சா, பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது, போதை ஆசாமிகள் இருவர் இவரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதைத் தொடர்ந்து, மது போதையில் இருந்த இருவரும் சேர்ந்து திருநங்கையை சரமாரியாக கத்தியால் தலையில் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். படுகாயமடைந்த அம்சா, பல்லடம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, பல்லடத்தை சேர்ந்த ஆரூன்தாசாவை கைது செய்த போலீசார், தலைமறைவான காளிதாஸ் என்பவரை தேடிவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்