பழனியில் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 'அதிசயம்'..முருகனுக்கு பூஜை.. கட்டளை.. 518 பேர் கையொப்பம்.. பிரமிக்க வைத்த தகவல்

x

பழனியில் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... திருமஞ்சன பண்டாரம் சண்முகம் பாதுகாத்து வைத்திருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார்... 3 கிலோ எடை, 49 சென்டி மீட்டர் உயரம், 30 சென்டி மீட்டர் அகலம் கொண்ட இச்செப்பேடு, பழனி முருகனுக்கு பூஜை செய்ய வேண்டி செவ்வந்தி பண்டாரத்திற்கு ஏற்படுத்தி கொடுத்த திருமஞ்சன கட்டளையை எடுத்துரைக்கிறது... 1363ம் ஆண்டு தை மாதம் 25ம் தேதி வியாழக்கிழமை தைப்பூச நாளில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது என்றும், இச்செப்பேட்டில் 518 பேர் கையொப்பமிட்டுள்ளனர். செப்பேட்டின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், முருகன், செவ்வந்தி பண்டாரம், செக்கு சின்னம் ஆகியவை வரையப்பட்டு முருகனின் புகழ் 5 பாடல்களாக பாடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்