தடுக்கி விழுந்த சோகம்.. மாஸ் காட்டிய ரவுடிஸ் to மாவுக்கட்டு பேஷண்ட்ஸ் -கருணையோடு மீட்ட போலீஸ்..

x

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடிதடி, கொலை, சூதாட்டம், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த 11 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மணி உள்ளிட்ட இருவரை ரவுடி கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்றது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை அடுத்து, பொதுமக்களை மிரட்டி அடிதடி, கொலை, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த 11 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இதில் பிரபல ரவடிகள் இருவர், காவல்நிலையத்தில் இருந்து தப்பிக்க முயன்றபோது, தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதை அடுத்து, அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்