இணையத்தில் வலம் வந்த தவறான தகவல்... வாக்குவாதம் முற்றியதால் சரமாரியாக அடித்துக்கொண்ட அதிமுகவினர்

x

இணையத்தில் வலம் வந்த தவறான தகவல்... வாக்குவாதம் முற்றியதால் சரமாரியாக அடித்துக்கொண்ட அதிமுகவினர் - பழனி அருகே பரபரப்பு

பட்டத்து விநாயகர் கோவில் அருகே அதிமுக சார்பில் நடந்த நீர்பந்தல் திறக்கும் விழாவில் அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் தனது காரில் கிளம்பிய போது அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன் காரை முற்றுகையிட்டு ஒருவரை ஒருவர் குறை கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையிலேயே அவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்... உடனடியாக நத்தம் விஸ்வநாதன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முருகானந்தம் குறித்து தவறான தகவலை அதிமுக பிரமுகர் ஒருவரே தனது நண்பர் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பியதால் இக்குழப்பம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்