குப்பை மேடாக காட்சியளிக்கும் நெல்லை.. பொதுமக்கள் கடும் அவதி..

x

நெல்லை சந்திப்பு பகுதியில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களில் இருந்து சேதமடைந்த பொருட்களும் குவிக்கப்பட்டுள்ளன. கட்ட‌ட கழிவுகள் உட்பட ஏராளமான குப்பைகள் குவிந்துள்ளதால், அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும் குப்பைகள் குறையாமல் மாநகர சாலை குப்பை மேடாக காட்சியளிக்கிறது. குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்