வந்தே பாரத் ரயிலுக்காக பலிகடாவான பிற ரயில்கள்.. உச்சகட்ட கடுப்பில் கேரள பயணிகள் செய்த செயல்

x

கேரளாவில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலால், பிற ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகக் கூறி பயணிகள் போராட்டம் நடத்தினர். கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, பயணிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கருப்புத்துணியால் முகத்தை மூடிக்கொண்டனர். இதுகுறித்து பேசிய கேரள மார்க்சிஸ்ட் எம்.பி. ஆரிஃப், இந்த விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்தலைவரை சந்தித்து முறையிட உள்ளதாகவும், வந்தே பாரத் ரயிலுக்காக, ரயில் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்