ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் அழிக்க வாய்ப்பு...பெரியார் பல்கலை. பொறுப்பு பதிவாளர் மீது புகார்

x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு செய்ததாக பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரின்பேரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையாளர்களுக்கு இளங்கோவன், இணையம் மூலம் மற்றொரு புகார் மனு அளித்துள்ளார். அதில், பெரியார் பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியர் மற்றும் தற்போதைய பொறுப்புப் பதிவாளரான விஸ்வநாதமூர்த்தி, பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வரும் விஷ்ணுமூர்த்தி மற்றும் அரின் மனைவி வனிதா ஆகியோரை காவல் துறை விசாரணைக்கு உட்படுத்தி, குற்றச்செயலுக்கு துணைபுரிந்ததற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆதாரங்களை அழித்திடவும், சாட்சிகளை கலைத்துவிடவும் வாய்ப்புள்ளதால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்