ஊட்டி சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... சந்தோசமாக வீடு திரும்பும் போது காத்திருந்த அதிர்ச்சி

x

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, தனியார் சொகுசு ஆம்னி பேருந்து, வேன் மீது மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 14 பேர், கோடை விடுமுறையை கொண்டாட ஊட்டி சென்றுவிட்டு வேனில் வீடு திரும்பியுள்ளனர். வாழப்பாடி அருகே புறவழிசாலை பகுதியில் சென்றபோது, வேன் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த தனியார் ஆம்னி பேருந்து வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் அன்பழகன், வாஞ்சிநாதன், ராஜா, உள்ளிட்ட 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்