'ஒற்றை' குவாட்டர் பாட்டில்.. உடைக்கப்பட்ட 3 பேரின் மண்டைகள்... கலவரபூமியான 2 கிராமங்கள்

x

ராணிப்பேட்டை மாவட்டம் பாப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தனது பக்கத்து கிராமமான சின்னகுக்குண்டி பகுதிக்கு சென்று ரவி என்பவரிடம் மது வாங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து வீடு திரும்ப முயன்ற தங்கராஜை, அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் வழிமறித்து பாட்டிலை தந்துவிட்டு செல்லுமாறு பிரச்சினை செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்களை, ஏகாம்பரம் மற்றும் ஊர் இளைஞர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தங்கராஜ் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது ஊர் மக்கள் செய்யாறு - ஆற்காடு சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்