சென்னையில் இருந்து கிளம்பிய ஆம்னி பேருந்து... திருச்சி அருகே நடந்த கோரம்... துடிதுடித்த உயிர்கள்

x

#chennai | #trichy | #accident

சென்னையில் இருந்து கிளம்பிய ஆம்னி பேருந்து... திருச்சி அருகே நடந்த கோரம்... துடிதுடித்த உயிர்கள்

சென்னையில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து கம்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள பால்பண்ணை அருகே விபத்துக்குள்ளானது. முன்னே சென்ற சரக்கு லாரியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில் ஓட்டுநர் சந்திரன், பயணி பழனியம்மாள் இருவரும் உயிரிழந்தனர். விபத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்