பெற்ற மகள் செய்த செயல் - ஆம்புலன்ஸில் வந்து மனு கொடுத்த மூதாட்டி - பரபரப்பான கலெக்டர் ஆபீஸ்

x

மகள் சொத்துக்களை அபகரித்து, கொடுமைப்படுத்துவதாக, மூதாட்டி ஒருவர், ஆம்புலன்சில் வந்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அரச மரபேட்டை பகுதியைச் சேர்ந்த 73 வயதான மூதாட்டி வித்யாவதி, ஆம்புலன்சில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அங்கு நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில், தனக்கு பிறவியிலேயே இடது கை மற்றும் இடது கால் செயல்படவில்லை என்று கூறியுள்ளார். தனது மூத்த மகள் செந்தமிழ்செல்வியும் அவரது கணவர் கோடீஸ்வரனும், தனது சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு, தனக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்