ஹைவேயில் பறந்த கார்-காதிற்கு வந்த ரகசிய தகவல்-சேஸ் செய்து வளைத்து பிடித்த அதிகாரிகள்-பரபரப்பு காட்சி

x

திருச்சி சமயபுரம் அருகே தங்கம் கடத்திச் சென்ற காரை

வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்...

திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் 2 பேர் தங்கம் கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அதிகாரிகள் காரைப் பிடிப்பதற்காக மற்றொரு காரில் விரட்டிச் சென்றனர்... இதனையறிந்த கடத்தல்காரர்கள் மின்னல் வேகத்தில் சென்னை நோக்கி பறந்த நிலையில் திருச்சி சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் தங்கம் கடத்தி வந்த கார் மடக்கிப் பிடிக்கப்பட்டது... காரில் இருந்த இருவரை அழைத்துச் சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்... இது தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்