"லீவு கேட்டா சரக்கு கேட்கும் அதிகாரி" - வேதனையில் தொழிலாளர்கள் செய்த செயல்

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், போக்குவரத்து அலுவலகத்தில், விடுமுறை கேட்டால் அதிகாரி மதுபானம் கேட்பதாக தொழிலாளர்கள், அறிவிப்பு பலகையில் எழுதியுள்ளனர்.

பரமக்குடியில் செயல்படும் பேருந்து பணிமனையில் 480 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு போக்குவரத்து கண்ட்ரோலராக சௌந்தரராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் விடுமுறை கேட்டால் பரமக்குடி ஐந்துமுனை அல்லது ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு வரச்சொல்வதாகவும், மதுபானம் வாங்கிக் கொடுத்தால் மட்டுமே விடுப்பு தருவதாகவும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அறிவிப்பு பலகையில் எழுதி, தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டுநர், நடத்துனரின் சிரமங்களை உணர்ந்து, பணிகளை ஒதுக்கி விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்