"யாரும் வெளியே வந்துடாதீங்க.." - தர்மபுரி மக்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை

x

பாலக்கோடு அருகே உணவு தேடி ஊரை சுற்றி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சாமனூர், ஜனப்பனூர் உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதன் அருகே உள்ள மலையில் பதுங்கி இருக்கும் சிறுத்தை ஒன்று கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, கோழிகளை தூக்கி சென்றுவருகிறது.

உணவு தேடி ஊரை சுற்றி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம என வனத்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விரைவாக கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்