கேள்வியெழுப்பிய தயாநிதி மாறனிடமே திரும்பி கேள்வி கேட்ட நிதின் கட்கரி

x

சென்னை- பெங்களூரு இடையிலான பசுமை வழிச்சாலை வருகிற டிசம்பருக்குள் முடிவடையக்கூடும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சென்னை -பெங்களூரு பசுமைவழிச் சாலை திட்டம் எப்போது நிறைவடையும் என திமுக எம்.பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதலமைச்சரிடம் இது தொடர்பாக பேசி, கட்டுமான பணிகளில் நெடுஞ்சாலை ஆணையம் எதிர்கொள்ளும் சவால்களை தெரிவித்துள்ளதாகக் கூறினார். இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறிய அவர், சாலை அமைக்க போதுமானவற்றை பெறாமல் எப்படி பணிகளை முடிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். தேவையான மூலப்பொருட்கள், அனுமதிகள் கிடைக்க உதவ வேண்டும் என தெரிவித்த கட்கரி, வருகிற டிசம்பருக்குள் பணிகளை முடிக்க முயற்சிக்கிறோம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்