வீட்டில் காதலனுடன் மது அருந்தி போதை காளான் சாப்பிட்ட காதலி மரணம்.. ஊட்டியில் அதிர்ச்சி

x

உதகையில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவி காதலனுடன் சேர்ந்து மதுவுடன் போதைக் காளான் சாப்பிட்டது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை, பாம்பேகேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். 20 வயதான இவர், உதகையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி நர்சிங் படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், காதலன் அழைத்ததின் பேரில் உதகை வந்த மாணவி, ஆகாஷின் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், காதலனுடன் சேர்ந்து மாணவி மது அருந்தியது தெரியவர, ஆகாஷை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று மாணவி மதுவுடன் சேர்ந்து போதைக் காளான் சாப்பிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் போதை காளான் சாப்பிட்டதால்தான் மாணவி

உயிரிழந்தாரா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்