அடுத்த 48 மணி நேரம்... வரப்போகும் கனமழை - மாறிய மேகம்.. வெளியான எச்சரிக்கை

x

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது...

நாளை தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்