"15ஆம் தேதி வரை..." - சென்னை திரும்பும் மக்களுக்கு வெளியான நியூஸ்

x

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக வரும் 15ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சென்னைக்கு நாள்தோறும் இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 அரசு பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 167 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். கடந்த 13ஆம் தேதி முதல் வரும் 15ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 9 ஆயிரத்து 467 பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையை தவிர்த்து இதர இடங்களில் இருந்து இன்றைய தினம் ஆயிரத்து 395 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை ஆயிரத்து 180 பேருந்துகள் என 3 ஆயிரத்து 825 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே சமயம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காவல்துறையினர் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்