964 பேரிடம் 194 கோடி ரூபாய் மோசடி... போலீசாருக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கில், அந்நிறுவனத்தின் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த நிலையில், கமலக்கண்ணன் 964 பேரிடம் 194 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், சொத்துக்களின் மதிப்பு குறித்து சார்பதிவாளர் அலுவலகங்களில் விபரம் கோரப்பட்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின், எவ்வளவு சொத்துக்களை முடக்க திட்டம் உள்ளது என அறிக்கை தாக்கல் செய்யுமாறு, போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்