40 மணி நேரமாக சிக்கி தவிக்கும் பயணிகள்..மீட்பு பணியில் தீவிரம்..பாட்டியை தூக்கி கொண்டு வரும் பேரிடர் குழு

x

தூத்துக்குடியில் இருந்து புறபட்ட 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் வந்தடைந்த நிலையில், பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் பயணிகள் 13 பேருந்துகள் மூலமாக சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கிருந்து சிறப்பு ரயில் மூலமாக பயணிகள் அனைவரும் சென்னை அழைத்து செல்லப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகள் சற்று நிம்மதியடைந்துள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்