முதியவரை அடித்துக் கொன்ற பள்ளி ஆசிரியர் - கூடங்குளம் அருகே அதிர்ச்சி

x

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, இடப்பிரச்சினை காரணமாக முதியவர் ஒருவரை பள்ளி ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளம் அருகேயுள்ள கூட்டப்புளியைச் சேர்ந்தவர் சகாய கீதன். அப்பகுதியில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மரியவிக்டர் என்ற முதியவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், முதியவரை சகாய கீதன் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ஆசிரியர் சகாய கீதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்