முடி வெட்ட காத்திருந்த வாலிபரின் தலையை வெட்ட முயற்சி? திசையன்விளையில் அதிர்ச்சி

x

இடைச்சிவிளை வேதக்கோவில் தெருவில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவர், அதே தெருவில் வசித்து வரும் லாரி ஓட்டுனர் சரவணன் என்பவரின் மனைவியுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை சரவணன் கண்டித்தும் முத்துக்குமார் கேட்காத நிலையில், அவரை கொலை செய்ய சரவணன் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், திசையன்விளை பேருந்து நிலையம் எதிரில் உள்ள இந்திரா மார்க்கெட் பகுதியில் உள்ள சலூன் கடையில் முத்துக்குமார், முடி வெட்ட சென்றுள்ளார். அப்போது, நண்பர்களோடு உள்ளே புகுந்த சரவணன், அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். கழுத்தில் வெட்டுபடாமல், தலையின் பின்பக்கத்தில் அரிவாள் பட்ட நிலையில், சுதாரித்துக்கொண்ட முத்துக்குமார், தப்பியோடியுள்ளார். அவரை விடாமல் அந்த கும்பல் விரட்டிச் சென்றது. அவர்களிடம் இருந்து தப்பி மயக்க நிலையில் இருந்த முத்துக்குமாரை, பொதுமக்கள் மீட்டு, மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்