சடலத்தை எடுத்துச்செல்ல எதிர்ப்பு... இரு தரப்பினர்களுக்கு இடையே மோதல் - நொறுங்கிய பஸ் - குவிந்த போலீசார்..

x

மேல ஏர்மாள்புரம் என்ற பகுதியில் இரு தரப்பினர் வசித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் வசிக்கும் பகுதியில் திருமண நிகழ்வும், மற்றொரு தரப்பினர் வசிக்கும் இடத்தில் துக்க நிகழ்வும் நடைபெற்றது. திருமண நிகழ்வு நடைபெற்ற வீடு சாலையோரத்தில் இருந்த நிலையில், சடலத்தை, சாலையில் எடுத்துச்சென்றுள்ளனர். அப்போது பட்டாசு வெடி வெடித்து கொட்டடித்து ஆடியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமண வீட்டுக்காரர்கள் இந்த வழியாக உடலை எடுத்துச் செல்லக்கூடாது என தெரிவித்ததால், இரு தரப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த தனியார் மினி பேருந்தை முற்றிலுமாக அடித்து நொறுக்கி உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடத்தை சாலை வழியே எடுத்துச்சென்றனர். இந்த கலவரத்தில் 5-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு காரணமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்