சிறுவனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்.. கஞ்சா போதையில் நடந்த வெறிச்செயல் | Nellai

x

நெல்லை மாவட்டம் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த அன்பு என்பவர், கலையரங்கம் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். காலை வேளையில், அன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றபோது, கொலையாளியை கைது செய்யக்கோரி, உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்