நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே துடிதுடித்து பலியான நபர் - நெல்லையில் அதிர்ச்சி

x

நெல்லை, கீழ முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரபுத்திரன். 28 வயதான இவர், லோடு ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் முன்னீர்பள்ளம் பஸ் ஸ்டாப் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென காரில் வந்திருங்கிய நான்கு பேர் கொண்ட கும்பல், வீரபுத்திரனை கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்ட ஆரம்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த இளைஞரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இளைஞர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வரும் போலீசார், மர்மகும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்