நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் விசாரிக்க சுகாதாரத்துறை அமைத்த குழு திட்டம்

x

நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் விசாரிக்க சுகாதாரத்துறை அமைத்த குழு திட்டம்

நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தை விவகாரம் தொடர்பாக விசாரிக்க இணை இயக்குனர் தலைமையில் விசாரணை துவங்கியது.

இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மருத்துவமனைகள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளும் எனவும், உரிய முறையில் பதிவு செய்யப்பட்டதா எனவும் ஆய்வு செய்யவுள்ளனர்.

எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது? தமிழகத்தில் தான் சிகிச்சை பெற்றாரா எனவும், தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வழங்கப்பட்ட பதிவில் நயன்தாரா - விக்னேஷ்சிவன் பெயர் உள்ளதா என்பது குறித்து விசாரணனை நடைபெற்று வருகிறது.

மருத்துவமனையின் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் யிடம் விசாரணை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை திட்டம்

விசாரணை முடிந்தவுடன் இணை இயக்குனர் தலைமையிலான குழு டிஎம்எஸ் இயக்குனரிடம் சமர்ப்பிப்பார்கள், அதன் பின் அரசுக்கு அந்த அறிக்கை வழங்கப்படும்.


Next Story

மேலும் செய்திகள்