நாங்குநேரி விவகாரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி

x

சிறந்த கட்டமைப்புகளுடன், தூய்மையாக பராமரிக்கப்படும் மருத்துவமனைகளுக்கு, தேசிய தர உறுதி நிர்ணயத் திட்ட விருது வழங்கப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், 239 மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதி நிர்ணயத் திட்ட விருதையும், 77 மருத்துவமனைகளுக்கு லக்‌ஷயா சான்றிதழ்களையும் வழங்கி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாங்குநேரி விவகாரத்தில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்