ஈபிஎஸ் உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி - பரபரப்பு சம்பவத்தில் அடுத்த அதிரடி

x

ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அருண்பிரகாஷின் வீட்டில் கடந்த 9ம் தேதி நள்ளிரவு நேரத்தில், 2 கார்களில் வந்த 8 பேர் கொண்ட மர்மகும்பல், வீட்டிற்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டு உள்ளே நுழைய முயன்றது. அப்போது மர்மகும்பலை பார்த்து அவரது சகோதரரி கூச்சலிடவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுதொடர்பான புகாரின் பேரில், சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடிவந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் மறைந்திருந்த அஜித்குமார் என்பரை போலீசார் தற்போது கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்