டீ கடையில் ஏற்பட்ட தகராறு..காரை மறித்து தாக்கிய கும்பல்..சுற்றுலா சென்றவர்களுக்கு அதிர்ச்சி

x

பாண்டிச்சேரி, கோட்டைக்குப்பம் பகுதியை சேர்ந்த 7 இளைஞர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற நிலையில், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் உள்ள டீ கடையில் தேநீர் அருந்தியுள்ளனர். அப்போது, அங்கு உடன் தேநீர் அருந்திய சிலருடன் இளைஞர்களுக்கு தகராறு ஏற்பட்டதாகவும், இரு தரப்பையும் அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இளைஞர்களின் கார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியே செல்வதை அறிந்த அவர்கள், குமாரபாளையத்தை சேர்ந்த தங்களின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், காரில் சென்ற இளைஞர்களை 10க்கும் மேற்பட்ட கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில், இளைஞர்களின் கார் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், குமாரபாளையத்தை சேர்ந்த மணி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்