திருவிழாவிற்கு காரில் வந்த இளைஞர்கள்..பரிதாபமாக பலியான 4 இளைஞர்கள் நாமக்கல் அருகே அதிர்ச்சி..

x

குமாரபாளையம் அடுத்த சீராம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 5 இளைஞர்கள் சொகுசு காரில் வந்துள்ளனர். குமாரபாளையத்திலிருந்து, சீராம்பாளையம் சென்ற கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய நிலையில், சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், காரில் பயணம் செய்த தனசேகரன், லோகேஷ், சிவக்குமார் மற்றும் கவின் ஆகிய நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்