பிரியாணியில் வேகாத கோழி இறைச்சி..இணையத்தில் தீயாய் பரவிய காட்சிகள் - அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்

x

நாமக்கல்லில் உள்ள பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்...நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள உணவகத்தில், கடந்த 24-ஆம் தேதி பெண் இருவர் பிரியாணி வாங்கி சென்றுள்ளார். அதில் கோழி இறைச்சி சரியாக வேகாத நிலையில் இருந்ததால், அது குறித்து கடையின் உரிமையாளரிடம் புகாரளித்துள்ளார். அதற்கு கடையின் உரிமையாளர் முறையான விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடையில் சோதனை செய்த அதிகாரிகள் இறைச்சியின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், கடையின் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்