10 நாட்களுக்கு பின் பலி.."விபத்து அல்ல.. கொலை.. பாதிரியார்" - உறவினர்கள் சொல்லும் பகீர் காரணம்

x

நாகர்கோவிலில் சாலை விபத்தில் பலியானவரின் உடலை வாங்க மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.நாகர்கோவில் அருகே மேல பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் அருள் ஜோஸ். இவர், காவல்கிணறு பகுதிக்கு கடந்த 2ஆம் தேதி டூவீலரில் செல்லும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆல்வின் அருள் ஜோஸ் நேற்று பலியானார். அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், ஆல்வின் அருள் ஜோஸ்-க்கும், பாதிரியார் குரூசு கார்மல் என்பவருக்கும் முன்பகை இருந்ததாகவும், அவரே இந்த சாலை விபத்திற்கு காரணம் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்